தினம் ஒரு நபி மொழி
ஒரு நாள் (பயணத்தின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்களின் வாகனத்தில் ) அவர்களுக்குப் பின்னால் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். “நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் (அவனுக்குப் பயந்து) பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் (அவனுக்குப் பயந்து) நீ பேணுதலாக நடந்துகொள். அவனது அருளை நீ காண்பாய். எதையும் கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு. நிச்சயமாக இந்த சமுதாயம் (முழுவதும்) உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனையும் அவர்கள் உனக்கு நன்மையாக செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனையும் அவர்கள் உனக்குத் தீங்காக செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2569
No comments:
Post a Comment