அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

கேள்வி - பதில்



தினம் ஒரு கேள்வி


இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?

பதில்:

யஹ்யா (அலை). மர்யம்(19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா (அலை) (3:45)


கண்திருஷ்டி என்பது என்ன?

கண்திருஷ்டி என்பது என்னகண்ணால் ஒருவரைப் பார்த்தவுடன் எதுவும் நடக்காதுகண்ணால்ஒருவரைப் பார்ப்பதினால் வீழ்த்த முடியாதுபிறகு கண்திருஷ்டி என்றால் ஒருவனின்பொறாமை அல்லது வயிற்று எரிச்சல் என்றுதான் விளங்கிக் கொள்ளவேண்டும்.பார்ப்பதினாலேயே ஒருவனை வீழ்த்துவதற்கு ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
வயிற்று எரிச்சல் என்பது ஒருவகையான பிரார்த்தனைதான்வாயால் இறைவனிடம் கேட்காமல்மனதினால் நினைத்து நினைத்து பொறாமை கொண்டு வயிற்று எரிச்சல் அடையும் போதுஒருநேரமில்லாவிட்டாலும் ஒருநேரம் பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படலாம்.கண்ணால் பார்த்துவிட்டு அவனது வயிறு எரிவதைத்தான் கண்திருஷ்டி என்று நபியவர்கள்சொல்லுகிறார்கள்அதனால்தான் ஜிப்ரயீல் அவர்கள் பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்என்றும் கண்ணை விட்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்எனவே பொறாமையினாலும் கேடுவிளையும்நோய் ஏற்படும் என்றெல்லாம் விளங்குகிறது.
ஒருவன் நேரடியாக வந்து நம்மை வெட்டுகிறான் குத்துகிறான் என்றால் அது ஒருவகைக் கேடு.அது இல்லாமல்ஒருவன் நம்மைப் பார்த்துவிட்டு ஏங்குவான்அதனால் பொறாமையில் வயிற்றுஎரிச்சல் அடைவான்இதுவும்கூட நம்மை வீழ்த்திவிடும்அதனால் பிறர் வயிறு எரியாமல் நமதுஅணுகுமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்குஒருவன் பணக்காரனாக இருக்கிறான்அவனது வீட்டிற்கு அருகிலுள்ளவன்ஏழையாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்இந்தப் பணக்காரன் 5 கிலோ கறி வாங்கிச்சாப்பிடுகிறான் என்றால் அருகிலுள்ள ஏழைக்கு ஒரு கால்கிலோ கறியையாவது கொடுத்துசாப்பிடவேண்டும்அப்படிக் கொடுத்து சாப்பிடும்போது அவன் வயிறு எரியமாட்டான்ஆனால்இந்தப் பணக்காரன் மட்டும் கிலோ கணக்காக கறியை வாங்கிவைத்து சாப்பிடுகிறான்பக்கத்துவீட்டுக்காரனை கவனிக்க வில்லையெனில் அந்த ஏழை ஏங்குவான்அதனால் வயிறு எரிவான்.இந்த வயிற்று எரிச்சல் சில வேலை பிரார்த்தனையாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதினால் பணக்காரனுக்கு கேடு நிகழ்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
யா அல்லாஹ்அவனுக்கு மட்டும் இப்படிக் கொடுத்திருக்கிறாயேஎனக்குக்கிடைக்கவில்லையேஎன்று ஏங்கி வயிறு எரிவதில்இறைவாஇவனுக்கு எதையாவதுநோவினையாகக் கொடுஎன்ற பிரார்த்தனை அவனது வயிற்று எரிச்சலுக்குள்அடங்கியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்அதனால்தான் பாதிப்பு ஏற்படுகிறது.கண்ணிலிருந்து ஒரு சக்தி கிளம்பி வந்தெல்லாம் நம்மைப் பாதிக்கவில்லைஎனவே பாதிப்புக்குக்காரணம் ஹஸத்-பொறாமைதான்வயிற்று எரிச்சல்தான் என்பது இந்த முஸ்லிம் கிரந்ததத்தில்பதிவு செய்யப்பட்ட செய்தி நமக்கு விளக்குகிறது.
எனவே நாம் பிறர் மீது பொறாமைப்படவும் கூடாதுநம்மீது பொறா மைப்படும்பொறாமைக்காரனின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
எனினும் இரண்டு விசயத்தில் பொறாமைப்படுவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிஉள்ளதுஅந்த இரண்டு விசயத்தை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமைகொள்ளக்கூடாதுஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில்செலவு செய்தல்இன்னொரு
மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கிஅதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும்கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்புகாரி 73,1409,5025,5026,7141,7316,7529 முஸ்லிம் 1484,1485,1486
ஒருமனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வாரிவழங்கியிருக்கிறான்அதில்பொறாமைப்படக்கூடாதுஅந்த செல்வத்தை இறைப்பணியில் நல்வழியில் வாரிவாரி அள்ளிகொடுக்கிறான்இதில் பொறாமைப் படவேண்டும்யா அல்லாஹ்இப்படி செல்வத்தைதாருமாறாக பிறருக்கு அள்ளிக் கொடுக்கிறானேயா அல்லாஹ்அதைப்போன்று எனக்கும்தந்தால் நானும் அள்ளிக் கொடுப்பேனேஎன்று அள்ளிக் கொடுப்பதற்கு பொறாமைகொள்ளவேண்டும்காசுபணம் வேண்டுமென்று பொறாமைப் படக்கூடாதுபணக்காரனைப்பார்த்து பொறாமைப்படக்கூடாதுதான்.
பணக்காரனாக இருந்து இவ்வுலக வாழ்வில் மூழ்கி மறுமையை மறந்து உலகமே சுவர்க்கம்என்று போலித்தனமாக நம்பி இவ்வுலக வாழ்க்கையில் சொகுசாக வாழ்கிற பணக்காரனைப்பார்த்து பொறாமைப் படக்கூடாதுமாறாகபணக்காரனாக இருந்து அந்தப் பணத்தையெல்லாம்பிறரது மருத்துவத்திற்காகவும்பிறரின் தொழில்துறைக்காகவும்பிறரது கல்விக்காகவும்சமூகத்திற்கு செலவு செய்கிறவனைப் பார்த்துநன்மைகளைக் கொள்ளை அடிப்பவனைப் பார்த்துஇவனைப் போன்று எனக்கும் இறைவன் தந்தால் நானும் இப்படி செலவு செய்வேனேஅளப்பரியநன்மைகளை அடைவேனேஎன்று பொறாமைப்படவேண்டும்.
இப்படி மார்க்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அள்ளிக் கொடுப்பவனைப் பார்த்து என்னையும்இப்படி ஆக்கு என்று இறைவனிடம் பிரார்த்திப்பதன் அர்த்தம்நானும் அவனைப் போன்றுபொருளாதாரத்தை நன்மையான வழியில் செலவுசெய்வேன் என்பதாகும்இப்படிபொறாமைப்படுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
அடுத்ததாகஒரு மனிதனுக்கு சிறந்த அறிவை ஞானத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.அதன்மூலம் அவர் நன்றாக நியாயமான தீர்ப்பளிக்கிறார்அதனைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கிறார்அதன் மூலம் மக்களுக்குப் போதனை செய்கிறார்இவரைப் பார்த்து நானும்இவரைப் போன்று மக்களுக்கு நல்லவழியைக் காட்டித்தர வேண்டும்நானும் மக்களுக்குநன்றாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பொறாமைப் படுவதற்கும் அனுமதியுண்டு.
அறிவில் பொறாமைப்பட்டுவிடக்கூடாதுஅறிவை நல்வழியில் செலவிடுவதில் பொறாமைகொள்ள வேண்டும்காசுபணத்திற்குப் பொறாமை கொள்ளக்கூடாதுகாசுபணத்தை நல்வழியில்செலவிடுவதில் பொறாமை கொள்ள வேண்டும்இவனுக்கு காசுபணத்தைக் கொடுத்துவிட்டாயே!அதை இல்லாமல் ஆக்கிவிடுஎன்று சொன்னால் அதற்குப் பெயர்தான் பொறாமைஇப்படிப்பொறாமை கொள்வது கூடாதுபொறாமைப் பற்றி இவ்வளவுக்கு புரிந்து கொள்வது போதுமானது.
ஆகபொறாமை கொள்பவன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான்பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இந்த வசனத்தோடு இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது.
மீண்டும் ஒரு தடவை இரண்டு அத்தியாயங்களையும் தொகுத்துப் பார்த்துக் கொள்வோம்.
قُلْ - (குல்நபியே நீர் சொல்வீராக!
بِرَبِّ النَّاسِ أَعُوذُ - (அவூது பிரப்பின்னாஸ்மனிதர்களின் கடவுளிடத்தில் (மனிதர்களைப் படைத்துப்பரிபாலிப்பவன்நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
ரப் என்றால் படைத்துப் பரிபாலிப்பவன் என்று அர்த்தம்படைத்துப் பரிபாலிப்பவனிடத்தில் நான்பாதுகாப்புத் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ - (மலிக்கின்னாஸ்மக்களின் அரசன் (சொந்தக்காரண்உடமையாளன்).
மனிதர்களின் சக்கரவர்த்திஒருமனிதன் ஒரு நாட்டுக்கு ஊருக்கு வேண்டுமானால் ராஜாவாகஇருக்கலாம்ஆனால் மனித சமூகத்திற்கே அரசனாக இருக்கிறவனிடத்தில் பாதுகாப்புத்தேடுகிறேன்.
إِلَهِ النَّاسِ - (இலாஹின்னாஸ்மனிதர்கள் வணங்குவதற்குத் தகுதியான(கடவுள்)வன்.
மனிதர்களின் வணக்கங்களுக்கெல்லாம் உரியவன் அவன்தான்.
இலாஹ் என்றால் வணக்கத்திற்குரியவன் என்று அர்த்தம்எனவே மனிதர்களின்வணக்கங்களுக்கெல்லாம் சொந்தக்காரனாகிய
அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்இப்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடும்போது மூன்று பண்புகளைச் சொல்லுகிறான்ஒன்றுஎன்னை ரப்பு என்று ஒத்துக்கொள்.அதாவது உன்னைப் படைத்துப் பரிபாலிப்பவன் நான்தான்உனக்கு ராஜா நான்தான்உன்னுடையவணக்கத்திற்கெல்லாம் சொந்தக்காரன் நான்தான்இப்படிப்பட்ட அல்லாஹ்விடத்தில் நான்பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லவேண்டும்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ - (மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்மறைந்திருந்து தவறான எண்ணங்களை(வஸ்வாஸ்ஏற்படுத்துகிற தீங்கிலிருந்து.
தீய எண்ணங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும்
الْخَنَّاسِ - மறைந்திருப்பவன் (ஒளிந்திருப்பவன்)
மறைமுகமாக இருந்து கொண்டு தீய எண்ணங்களை உண்டாக்குவதுநேரடியாக நம்மைத்தாக்காமல் மறைந்திருந்துஅதாவது கன்னாஸ் என்றால் மறைந்திருந்து தீங்கைஏற்படுத்துபவனின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ - (அல்லதீ யுவஸ்விஸு ஃபீ சுதூரின்னாஸ்மனிதர்களின் உள்ளங்களில் கெட்டஎண்ணங்களை ஏற்படுத்துகிறவன்.
மனிதர்களின் உள்ளங்களில் தவறாக எண்ணங்களை ஏற்படுத்துவார்களே அந்தத் தீங்கிலிருந்துநான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ - (மினல் ஜின்னத்தி வன்னாஸ்) (இத்தைகையவர்கள்ஜின்களிலும் மனிதர்களிலும்உள்ளனர்.
இப்படி செய்யக்கூடியவர்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள்ஜின்களிலும் இருக்கிறார்கள்.அதாவது மனிதர்களிலிருலிந்து கெட்டவர்கள் தீய எண்ணங்களை என்னிடத்தில்ஏற்படுத்துவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றிவிடுஜின்களிலிருந்து கெட்டவர்கள் தீயஎண்ணங்களை என்னிடதில் ஏற்படுத்துவதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிடு என்று இப்படிநம்மை பாதுகாப்பைத் தேடச்சொல்லி குர்ஆனின் 114 வது
அத்தியாயத்தில் நமக்குக் கட்டளையிடுகிறான்.
قُلْ - (குல்நபியேநீங்கள் சொல்லுங்கள்.
أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - (அவூது பிரப்பில் ஃபலக்அதிகாலையின் (வைகறைப் பொழுதுஇரட்சகனிடம்பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லுங்கள்.
வெளிச்சத்தினுடைய அதிகாலையுடைய விடியற்காலையுடைய இறைவனிடத்திலேபாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபியே சொல்வீராகஎனவே வெளிச்சத்திற்கு அவன்தான்சொந்தக்காரன்அவன் நினைத்தால் சூரியனை உதிக்காமல் ஆக்கிவிட்டால் எப்போதுமேஇருட்டாகத்தான் இருக்கும்வெளிச்சத்திற்கு சொந்தக்காரனாக இருக்கிற காரணத்தினால்அவனிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
مِنْ شَرِّ مَا خَلَقَ - (மின் ஷர்ரி மா கலக்அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புத்தேடுகிறேன்.)
அவன் படைத்திருக்கிற எல்லாப் பொருட்களின் தீங்கிலிருந்தும் அதாவது அவன் எதைப்படைத்திருந்தாலும் அதில் தீங்கும் இருக்கிறதுசோற்றில் தீங்கு இருக்கிறதுபிரியாணியில்தீங்கு இருக்கிறதுஇந்த மைக்கில்கூட தீங்கு இருக்கிறதுநல்லதும் இருக்கிறதுதீங்கு மட்டும்எனக்கு வரக்கூடாதுநல்லதாகவே வந்து கொண்டிருக்க வேண்டும்மேலும் எப்படியெல்லாம்தீங்கு வரும் என்பதையும் நாம் விளக்கியிருக்கிறோம்எனவே அவன் படைத்திருக்கின்றபடைப்பின் அனைத்துத் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - (வமின் ஷர்ரி காஸிக்கின் இதா வகப்பரவும் இருளின் தீங்கை விட்டும் (நான்அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)
இருள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது ஏற்படுகிற தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.அல்லது சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது நடக்கவிருக்கிற தீங்கை விட்டும் நான்பாதுகாப்புத் தேடுகிறேன்.
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - (வமின் ஷர்ரின் னஃப்பாஸாத்தி ஃபில் உகத்முடிச்சுக்களில் ஊதும் பெண்களின்தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)
தலைமாட்டில் உட்கார்ந்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு அதிகாலைத் தொழுகைக்குஎழுந்திருக்க விடாமல் முடிச்சுகளில் ஊதுகிற ஷைத்தான்களின் தீங்கை விட்டும் நான்பாதுகாப்புத் தேடுகிறேன்
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  - (வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்பொறாமைக்காரன் பொறாமைகொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனால் என்னவெல்லாம் தீங்கு ஏற்படுமோஅதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நீ சொல்லு என அல்லாஹ் நமக்குகட்டளையிடுகிறான்குல் சொல்லுகூறு என்று சொல்லுகிறான்.
இதை ஒவ்வொரு நாளும் இரவில் நாம் படுக்கைக்குச் செல்லும் போது சொல்லிக் கொண்டால்துன்பங்கள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டோமானால்இந்த மேற்சொன்ன கேடுகளில்எந்தக் கேடாவது நமக்கு வரும் என நினைக்கும் போதெல்லாம் இவைகளைச் சொல்லிக்கொள்ளலாம்எவனோ நம்மீது பொறாமைப் படுகிறான் என்ற நினைப்பு வருகிறதென்றால் இந்தஇரண்டு அத்தியாயங்களையும் ஓதிக்கொள்ளலாம்எவனாவது நம்மிடம் வஸ்வாஸைஉண்டுபண்ணி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டு போகிறான் என்றுநினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு சூராக்களையும் ஓத வேண்டும்.
திடீரென மின்சாரம் (கரண்ட்நின்றுவிட்டால் நமக்கு ஏதாவது உள்ளத்தில் சலனம் ஏற்படும்.ஏனெனில் இருட்டைக் கண்டுதான் பேய்பிசாசு போன்ற தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது.இரட்டைக் கண்டு உள்ளத்தில் சலனம் ஏற்பட்டாலும் இந்த அத்தியாயங்களை ஓதலாம்ùனில்குல் அவூது பிரப்பில் ஃபலக் என்றால்வெளிச்சத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று சொல்லும்போது நம்மை இறைவன் பாதுகாக்கிறான் என்று உணர வேண்டும்.
இப்படி இந்த சூராவில் சொல்லப்பட்ட விசயங்களை நாம் சந்திக்கும் போதெல்லாம்கெட்டஎண்ணங்கள் வரும்போதுஇருட்டைக் காணும் போதுகிரகணம் ஏற்படும் பொழுதுஷைத்தான்நம்மை வீழ்த்திவிடுவான் என்று நினைக்கும் போதுபொறாமைக்காரன் நம்மீதுபொறாமைப்படுவான் என்று நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு அத்தியாயங்களை ஓதிபாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும் என்கிற இரண்டு கவசங்களாக அல்லாஹ் தந்திருக்கிறான்.எனவே இந்த இரண்டு சூராக்களையும் அதற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்அல்லாஹ் நம்மனைவரையும் நேரான வழியில் நடத்துவானாக!!

துஆக்கள் ஏற்கப்படும் நேரங்கள் யாவை?

எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பிரார்த்த்னை ஏற்கப்படும்; மற்ற நேரங்களில் ஏற்கப்படாது என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.
இரவின் கடைசி நேரம்
இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.
இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494
ஸஜ்தாவின் போது..
அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடியான்அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 744
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை
நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட,அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டுஉனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 4912
ஜும்ஆ தொழுகையின் நேரம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாüல் ஒரு நேரம் இருக்கின்றதுஅந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்துஅதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும்அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தி னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)புகாரி 935
திங்கள் மற்றும் வியாழக்கிழமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட் கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :முஸ்லிம் 5014
பயணங்களின் போது . . .
பயணிகளின் துஆவுக்கு இறைவனின் தனிக்கவனம் இருக்கின்றது என்பதைப் பின் வரும் செய்தியிலிருந்து அறியலாம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்''என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான்நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால்,அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவாஎன் இறைவாஎன்று பிரார்த்திக்கிறார். ஆனால்அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறதுஅவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறதுஅவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறதுதடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1844
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் யாருடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விவரிக்கின்றார்கள். அதை சாதாரணமாக ஹராமில் உழல்பவனின் துஆ ஏற்கப்படாது என்று கூறினாலே போதுமானது. ஆனால் ஒரு பயணியின் துஆவைக் குறிப்பிட்டு அவன் ஹராமில் ஈடுபடுகிறான் என்பதினால் அவனது பிரார்த்தனை நிராகரிக்கப்படும் என்று கூறுவதிலிருந்து பயணிகளின் துஆ,இறைவனின் நெருக்கத்தைப் பெறுகிற துஆ என்பதை சந்தேமற அறியலாம். அப்படிப்பட்ட துஆக்கூட ஹராமில் ஈடுபடுவதினால் நிராகரிக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது என்று கவலையோடு தெரிவிக்கின்றார்கள். எனவே பயணத்தின் போது செய்யப்படுகின்ற துஆக்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதினால் அதிகமதிகம் பிரார்த்தனை புரிய வேண்டும்

 மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன.
மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.
சிந்தித்துப் பார்க்கும்போது முதல் மனிதன் மட்டுமின்றி விந்துத் துளி மூலம் உருவான முதல் மனிதனின் வழித்தோன்றல்களும் உண்மையில் மண்ணாகவே இருக்கின்றனர்.
இப்போது உலகில் 700 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 35,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.
ஒரு மனிதனும் இல்லாதபோது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 700 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.
700 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமானபோதும் 35 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 700 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 35 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நாம் உண்ணுகிற உணவுகள், மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.
ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.
நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப்பார்த்தால் எதிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டார்களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!
ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். நம் உடம்பில் இவை தாம் உள்ளன. பல வகையாக வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.
முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப்பட்டான் என்பதும், அவனது வழித்தோன்றல்கள் மறைமுகமாக மண்ணிலிருந்து தான் வளர்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.
மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்தபோது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.
ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.


வானவர்களை நாம் பார்க்க முடியுமா? 


வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன. அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் மறைவான விஷயம் என்ற அடிப்படையில் நாம் நம்புகிறோம். ஆனால் அந்த சபையில் நாம் இருந்தாலும் வானவர்களை நாம் காண முடிவதில்லை.
477 - حدثنا مسدد، قال: حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: " صلاة الجميع تزيد على صلاته في بيته، وصلاته في سوقه، خمسا وعشرين درجة، فإن أحدكم إذا توضأ فأحسن، وأتى المسجد، لا يريد إلا الصلاة، لم يخط خطوة إلا رفعه الله بها درجة، وحط عنه خطيئة، حتى يدخل المسجد، وإذا دخل المسجد، كان في صلاة ما كانت تحبسه، وتصلي - يعني عليه الملائكة - ما دام في مجلسه الذي يصلي فيه: اللهم اغفر له، اللهم ارحمه، ما لم يحدث فيه "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழும் நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.  தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால்,  சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல்) மூலம் அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.
நூல் : புகாரி 477
பள்ளிவாசலில் தொழுகைக்காக நாம் காத்திருக்கும் போது வானவர்கள் அந்தச் சபையில் இருந்தாலும் அவர்கள் நம் கண்களுக்குத் தென்படுவதில்லை.
555 - حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا مالك، عن أبي الزناد، عن الأعرج، عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم قال: " يتعاقبون [ص:116] فيكم ملائكة بالليل وملائكة بالنهار، ويجتمعون في صلاة الفجر وصلاة العصر، ثم يعرج الذين باتوا فيكم، فيسألهم وهو أعلم بهم: كيف تركتم عبادي؟ فيقولون: تركناهم وهم يصلون، وأتيناهم وهم يصلون "
555 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம்,  என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவர்கள், உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.
நூல் : புகாரி 555
தினமும் காலையிலும், மாலையிலும் நம்மைப் பார்க்க வானவர்கள் வந்தாலும் ஒரு நாளும் நாம் அவர்களைப் பார்த்ததில்லை.
799 - حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن نعيم بن عبد الله المجمر، عن علي بن يحيى بن خلاد الزرقي، عن أبيه، عن رفاعة بن رافع الزرقي، قال: " كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم، فلما رفع رأسه من الركعة قال: سمع الله لمن حمده "، قال رجل وراءه: ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، فلما انصرف، قال: «من المتكلم» قال: أنا، قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها أول»
ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய போது சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. பகட்டோ பெருமையோ கலவாமல் தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான்தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 799
ஒரு நபித்தோழர் கூறியதை வானவர்கள் பதிவு செய்த விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததால் தான் நபித்தோழர்களுக்கு தெரியவந்த்து. அவர்கள் வானவர்களைப் பார்க்கவில்லை.
929 - حدثنا آدم، قال: حدثنا ابن أبي ذئب، عن الزهري، عن أبي عبد الله الأغر، عن أبي هريرة ، قال: قال النبي صلى الله عليه وسلم: «إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول، ومثل المهجر كمثل الذي يهدي بدنة، ثم كالذي يهدي بقرة، ثم كبشا، ثم دجاجة، ثم بيضة، فإذا خرج الإمام طووا صحفهم، ويستمعون الذكر»
929 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளி வாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும், அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவராவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டு உரையைச் செவிதாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 929
ஒவ்வொரு ஜுமுஆவுக்கும் வானவர்கள் வருவது உறுதி என்றாலும் அவர்கள் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். தென்பட மாட்டார்கள் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை நமக்கு கூறுகிறார்கள்.
3303 - حدثنا قتيبة، حدثنا الليث، عن جعفر بن ربيعة، عن الأعرج، عن أبي هريرة رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم، قال: «إذا سمعتم صياح الديكة فاسألوا الله من فضله، فإنها رأت ملكا، وإذا سمعتم نهيق الحمار فتعوذوا بالله من الشيطان، فإنه رأى شيطانا»
3303 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்துவிட்டன. கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்துவிட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி 3303
நாம் வானவர்களைப் பார்க்க முடியும் என்றால் சேவல் சப்தத்தை வைத்து வானவர்களின் வருகையை அறியத் தேவை இல்லை. நாமே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
3768 - حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، قال أبو سلمة: إن عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم يوما: «يا عائش، هذا جبريل يقرئك السلام» فقلت: وعليه السلام ورحمة الله وبركاته، ترى ما لا أرى «تريد رسول الله صلى الله عليه وسلم»
3768 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல் லாஹி வபரக்காத்துஹு' - அவர் மீதும் சலாம் பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய பரக்கத்தும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லி விட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.
நூல் : புகாரி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் இருக்கும் போது வந்த வானவரை ஆயிஷா (ரலி) பார்க்கவில்லை. ஆயிஷா (ரலி)க்கு ஜிப்ரீல் சலாம் சொல்லும் போது கூட ஆயிஷா (ரலி)க்கு நேரடியாக சலாம் கூறாமல் நபியின் வழியாகவே சொல்கிறார்கள். இதிலிருந்து நபிமார்களைத் தவிர மற்றவர்கள் வானவர்களைக் காண முடியாது என்பது உறுதியாகிறது. நான் பார்க்காததை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று ஆயிஷா (ரலி) கூறியது இதை இன்னும் அழுத்தமாகக் கூறுகிறது.
சில வேளைகளில் மனித வடிவில் வானவர்கள் வந்த போது நபித்தோழர்கள் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் வானவர்கள் என்பதை நபித்தோழர்கள் அறியவில்லை. அவர் வந்து சென்ற பின்னர் வானவர் வந்தார் என்று நபிகள் சொன்ன பிறகே நபித்தோழர்கள் வானவர் வந்தார் என்பதை அறிந்து கொண்டார்கள்.
50 - حدثنا مسدد، قال: حدثنا إسماعيل بن إبراهيم، أخبرنا أبو حيان التيمي، عن أبي زرعة، عن أبي هريرة، قال: كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس، فأتاه جبريل فقال: ما الإيمان؟ قال: «الإيمان أن تؤمن بالله وملائكته، وكتبه، وبلقائه، ورسله وتؤمن بالبعث». قال: ما الإسلام؟ قال: " الإسلام: أن تعبد الله، ولا تشرك به شيئا، وتقيم الصلاة، وتؤدي الزكاة المفروضة، وتصوم رمضان ". قال: ما الإحسان؟ قال: «أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك»، قال: متى الساعة؟ قال: " ما المسئول عنها بأعلم من السائل، وسأخبرك عن أشراطها: إذا ولدت الأمة ربها، وإذا تطاول رعاة الإبل البهم في البنيان، في خمس لا يعلمهن إلا الله " ثم تلا النبي صلى الله عليه وسلم: {إن الله عنده علم الساعة} [لقمان: 34] الآية، ثم أدبر فقال: «ردوه» فلم يروا شيئا، فقال: «هذا جبريل جاء يعلم الناس دينهم» قال أبو عبد الله: جعل ذلك كله من الإيمان
50 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றனர்.
அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றனர்.
அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (உம்மை விட) மிக அறிந்தவரல்லர். அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது... எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள் என்றனர். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் ஜிப்ரீல் ஆவார். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றனர்.
நூல் : புகாரி 50
நமது சபைகளுக்கு வானவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களை நாம் பார்க்கிறோம் என்றால் அவர்கள் வானவர்கள் தான் என்று உறுதிப்படுத்த நபியவர்கள் இல்லை.
எனவே இது போன்ற கிராபிக் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களைப் பரப்பி பாவத்தைச் சுமக்க வேண்டாம்.

இறந்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் எழுப்பலாமா?

இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை நினைவுகூர்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த சஹாபிக்கும் இத்தகைய நினைவுத்தூண்களை எழுப்பவில்லை.
கீழ்க்கண்ட நபிகளாரின் எச்சரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816,
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746,
அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
தர்கா வழிபாட்டின் ஆரம்பமே இறந்தவர்களது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைத்தானின் தூண்டுதல் தான்.
இத்தகைய செயல்பாடுகளில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.

தொழுகையில் பார்வை எந்த திசையில் இருக்க வேண்டும்?

தொழுகையில் நெற்றி படும் இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டிருந்தால் நபிகள் நாயகத்தின் தாடை அசைவதை நபித்தோழர்கள் பார்த்திருக்க முடியாது
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல்: புகாரி 748

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்று பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, "இதை நீ நினைத்துப் பார், அதை நீ நினைத்துப் பார்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 608
தொழுகையில் உலக எண்ணங்களை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதே செய்தி புகாரியில் 1231வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட இதே செய்தியுடன், "உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்துக்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
உலக எண்ணங்கள் ஏற்பட்டு விட்டால் தொழுகை முறிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல், ரக்அத்தில் மறதி ஏற்பட்டால் ஸஜ்தா செய்து கொள்ளுமாறு கூறுகின்றார்கள். இதிலிருந்து தொழுகையில் உலக எண்ணங்கள் ஏற்படுவதால் தொழுகை முறியாது என்பதை அறியலாம். அதே சமயம் இயன்ற வரை தொழுகையில் கவனம் சிதறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.
(அல்குர்ஆன் 23:1,2)
தொழுகையில் ஓதப்படும் வசனங்கள் மற்றும் திக்ருகளின் பொருளை உணர்ந்து தொழும் போது, இது போன்ற எண்ணங்கள் ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.

No comments:

Post a Comment