அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Saturday, October 22, 2016

ஜுமுஆவின் நன்மைகளை முழுமையாகப் பெறுபவர்


 தினம் ஒரு நபிமொழி


“மூன்று சாரார் ஜுமுஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜுமுஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜுமுஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜுமுஆவிற்கு வந்து (குத்பாவைச் செவியுறாமல்,) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராக இருக்கின்றார். அல்லாஹ் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜுமுஆவிற்கு வந்து வாய் மூடி மவுனமாக (குத்பாவை செவிதாழ்த்திக் கேட்டபடி) இருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. அவருக்கு, இந்த ஜுமுஆ அதை அடுத்து வரும் ஜுமுஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 941

No comments:

Post a Comment