ஏக இறைவனின் திருப்பெயரால்..
வணக்கமில்லா கல்வி
√ நாம் சிந்திக்க வேண்டும் அல்லாஹ் குர்ஆனின் முதல் வசனத்தை கல்வியின் சம்மந்தமாக ஏன் இறக்க வேண்டும்❓
அல்லாஹ் நாடுவது நம்மிடம் கல்வின் மூலம் வணக்கம் வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பலர் பல டிகிரி ,பல முன்னேற்றத்தில்இருக்கிறார்கள் இவ்வுலக கல்வியால்.
ஆனால்!!
தனது பெற்றோர்களுக்கு கூட மகனால் ஜனாஸா தொழுகையில் என்ன ஒதுவது என்று கூட தெரியவில்லை (ஜனஸாவில் ஓதும் துஆக்களும் தெரிவதில்லை)
தனது பெற்றோர்களுக்கு கூட மகனால் ஜனாஸா தொழுகையில் என்ன ஒதுவது என்று கூட தெரியவில்லை (ஜனஸாவில் ஓதும் துஆக்களும் தெரிவதில்லை)
அதற்கு யார் காரணம் என சிந்தித்து பார்த்தால் பெற்றோர்கள் தான் என்பதில் அணுஅளவும் சந்தேகம் இல்லை.
இன்று பார்க்கின்றோம் நம் குழந்தைகள் கல்வியை கற்பதற்காக கல்வி கூடங்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் கல்வி கூடங்களில் கல்வி நிலையங்களில்
☀ தொழுகை இல்லை
☀ மார்க்கம் இல்லை
☀ இஸ்லாம் இல்லை
தன் பிள்ளைகளை காலை ஃபஜருடைய நேரத்தில் பெற்றோர்கள் எழுப்புகிறார்கள் எதற்கு தொழுகைக்கு அனுப்பவா இல்லை
கல்வி கூடங்களுக்கு போக தன் பிள்ளைகளை தயார் செய்வதற்கு .
அடுத்து ளுஹருடைய நேரத்தையும் அஸருடைய நேரத்தையும் கல்வி நிலையங்களிலே பிள்ளைகளுக்கு கழிந்து விடும்.
மஃரிபும் , இஷாவும் டியூசன் அல்லது விளையாட்டு அல்லது ஊர் சுத்துவது அல்லது வெட்டி கதை பேசுவதற்கு ஆகிய செயல்களில் கழிந்து விடும்.
இப்படி தொழுகையை விடக்கூடிய சமூகத்தை கல்வியை கொடுக்கிறோம் என்ற பெயரிலே அழித்து கொண்டு இருக்கிறோம் அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர.
பெற்றோர்களே
樂 வணக்கமில்லாத கல்வியை கற்று கொண்டு உங்கள் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் படைத்த இறைவனின் சமூகத்தில்❓
மார்க்கத்தை கற்று கொடுக்காத நீங்கள் வேறு எதை கற்று கொடுத்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து எப்படி தப்புவீர்கள்❓தப்பவும் முடியாது.
☀ ஹோம் வோர்க் எழுதினாயா❓
☀ பள்ளி பாடம் படித்தாயா❓ என்று கேட்கும் பெற்றோர்கள்
☀ குர்ஆன் ஒதினாயா❓
☀ மதரஸாவிற்க்கு சென்றாயா❓
☀ என்று பல பெற்றோர்கள் கேட்பது கிடையாது
தமது பிள்ளைகளுக்கு
10ம் வகுப்பு, 12 ம் வகுப்பில் நல்ல மார்க், இன்ஜினியர், டாக்டர் ஆவது தான் லட்சியம் னு சொல்லி கொடுக்கிறோம்.
10ம் வகுப்பு, 12 ம் வகுப்பில் நல்ல மார்க், இன்ஜினியர், டாக்டர் ஆவது தான் லட்சியம் னு சொல்லி கொடுக்கிறோம்.
ஆனால் அவர்களிடம் மார்க்கத்தை சொல்லுறோமா❓
樂 பிறகு எப்படி நமது பிள்ளைகளுக்கு மார்க்கம் தெரியும் ஸாலிஹான பிள்ளைகளாக எப்படி வளரும்.நாம்.சிந்திக்க வேண்டாமா❓
இன்று நம் பிள்ளைகளுக்கு உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியூவத்தை மார்க்க கல்விக்கு கொடுப்பது இல்லை
அல்லாஹ் கூறுவதை பாருங்கள்
⚪ இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56
ஆகையால் உங்கள் அருகில் உள்ள பள்ளிகளில்பிள்ளைகளுக்கு கோடைகால மார்க்க கல்வி வகுப்புகளுக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment