Saturday, October 13, 2018
Friday, October 12, 2018
Thursday, October 11, 2018
Wednesday, October 10, 2018
தினம் ஒரு குர்ஆன் வசனம்*
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRe40ov2JE8_sZtJkHHFBep_NWes7QpFJesFNnkjeYS5_AcarGVZ9uMHSsNxBkUNq5nXqmMGkMfnqSbkXDsHps_sbjVaFG4BpBwu8yEVtvxNdA1Lhl_YHhMTt1ZW54QYQwLAw8ItTrzRGa/s200/10.jpg)
Tuesday, October 9, 2018
தினம் ஒரு குர்ஆன் வசனம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidffTqHpJyuk96mmgi-grZewzYiuKfGbuRrZd-7-jUywPtYF3FkfKtCIfugHBnr4qhALMBEVJ27i5WJGbUlQB93uVukFd8FuTqY6wF6Bz-zotunW1Dw0fXYSj-tbUrv9zE-96_0AKpu9du/s200/43331295_2260022834009546_2107154257277878272_n.jpg)
Monday, October 8, 2018
Sunday, October 7, 2018
Saturday, October 6, 2018
Friday, October 5, 2018
Thursday, October 4, 2018
Monday, October 1, 2018
Thursday, September 20, 2018
தினம் ஒரு குர்ஆன் வசனம்
Wednesday, September 19, 2018
ஆஷூரா நோன்பு ஏன்?
Monday, September 17, 2018
தினம் ஒரு குர்ஆன் வசனம்
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி உண்டு.
திருக்குர்ஆன் 41:8
Thursday, August 2, 2018
*குர்பானியின் சட்டங்கள்*-01
முன்னுரை
நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
குர்பானியின் பின்னணி
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
*இன்ஷா அல்லாஹ் தொடரும்...*
Wednesday, July 25, 2018
*அறிந்து கொள்வோம் - 001
*அறிந்து கொள்வோம்*
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
*தொழுகையை சரிப் படுத்துவோம்!*
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
முதல் கேள்வியே தொழுகை தான்.
இறைவன் நம் மீது கடமையாக்கி இருக்கிற அமல்களில் மிகமிக முக்கியமானது ஒரு அமல் தொழுகை. இந்த கடமையில் நாம் அனைவரும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இந்த நேரம். ஏனெனில், அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான். இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோமா? என்று யோசிக்க வேண்டும். ஏகத்துவ கொள்கையை ஏற்ற முஸ்லிம்களில் பலர் தொழுகை எனும் அமலில் மறுமை நாளில் நஷ்டமாகி விடக்கூடாது.
அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : நஸயீ 463
தொழாதவர்களுக்கு எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால் அவன் சாதாரண குற்றத்தைச் செய்திருக்க முடியாது. தொழாதவனிடம் போர் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 25
தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறை மறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றை இறை மறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும்?. இதைத் தொழாதவர்கள் உற்று நோக்க வேண்டும்.
நோயாளியின் தொழுகை
தொழுகையை நின்று தான் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. ஆனால் நின்று தொழ முடியாத கட்டங்களில் உட்கார்ந்தாவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளியாக இருந்தாலும் தொழுகையை விடுவதற்கு இந்த மார்க்கத்தில் விதிவிலக்கு கிடையாது. என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது.
எனக்கு மூல நோய் இருந்தது. “எவ்வாறு தொழுவது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.
அறி : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),
நூல் : புகாரீ 1117
போர்க்களத்திலும் தொழுகை
தொழுகை விஷயத்தில் இஸ்லாம் எள்ளவும் விட்டுக் கொடுப்பதில்லை. தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதே ஆக வேண்டும். அவ்வாறு தொழவில்லை என்றால் அவர் குற்றவாளி ஆகி விடுகின்றார். போர்க்களத்தில் கூட தொழுகையை ஒத்திப் போட அனுமதியில்லை. இதற்காக போர்க்காலத் தொழுகை என்ற சலுகையை வழங்கி, அந்தந்த நேரத்தில் தொழச் செய்கிறான். கடமையான தொழுகையை போர்க்களத்திலேயே தள்ளிப் போட அனுமதியில்லை எனும் போது மற்ற சாதாரண நேரத்தில் தள்ளிப் போட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஒரு வேளை தொழுகையைக் கூட விடாமல் தொழுது, முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!
Thursday, June 21, 2018
மீண்டும் ஒரு நினைவூட்டல்
நிறைய வேண்டாம்! பர்க்கத் போதும்-2
Wednesday, June 20, 2018
நிறைய வேண்டாம்! பர்க்கத் போதும் -1
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5MFUz4fMJaqrWK8JhIGlnKtsaujMJpY4dAY-Ka5ro3HZygAm-Klb8mwEirHPW_9iDRo2GIk1bNIHk_R6gHvH8D5p1Ik5Mccx8iP_MeLoGOOCZJRySlbIAwPPGaHbi3YIGU2BOUR1F7zo6/s200/unnamed.jpg)